நல்ல தொரு அப்பா வாய்த்த குழந்தைகள்
அதிருஷ்டசாலிகள்.
குழந்தையில்லாமல்
தான் அப்பாவாக முடியாது
என்றறிந்த அப்பாக்கள்
அபூர்வமானவர்கள்.
குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே
உணரத் தெரிந்த அப்பாக்கள் அறிவாளிகள்.
தான் என்னவாக இருக்கிறோம்
என்பதையே அறியாமல்
அம்மாவையும் குழந்தையையும்
படைத்தவர்கள் பிரம்மாக்கள்.
பிரம்மனின் வாரிசுகள்
பிரம்மனை அடைய
தவம் புரிந்து கொண்டிருக்கின்றனர்.