எது எதை
எவ்வப்பொழுது
எப்படியெப்படி
உரையாடுவதென்கிற
தியானிப்பில்
நம் உறவில்
விரிந்து கிடக்கிறது
பெருமௌன பாலை ஒன்று!
எது எதை
எவ்வப்பொழுது
எப்படியெப்படி
உரையாடுவதென்கிற
தியானிப்பில்
நம் உறவில்
விரிந்து கிடக்கிறது
பெருமௌன பாலை ஒன்று!
முளைத்த புதிய வால்
பிளாஸ்டிக்கால் ஆனது
தன் முதல் வாலை
இழந்த கணத்தை
அது அறிந்திருக்க வாய்ப்பில்லை
உயிரை இழக்காது
வாலை மட்டும் இழந்த
இயற்கையின் மகத்துவத்தையும்
அது அறிந்திருக்க வாய்ப்பில்லை
இன்று பிடித்து தின்ற
பூச்சியின் பெயரையோ
தன் உயிர் பறிக்க வந்த
பூச்சியையோ மனிதனையோ
அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை
வயிற்றினுள் முட்டை வைத்திருக்கும்
பல்லியை விரட்டிச் செல்லும்
அந்தப் பல்லி
தினமும் வேவு பார்க்கப்படுவதையும்
அது அறிந்திருக்க வாய்ப்பில்லை
அறிவே இல்லாத பல்லிகளும்
அறிவுக்கூரிய பல்லிகளும்
வெள்ளை மாளிகைகளில்
வசிப்பதையும்
வசிப்பவர்களையும்
நேசிக்கின்றன ஆராதிக்கின்றன.பின்னிரவு நேரத்தின்
தொலை தூர
இரயிலோசையென
கடந்து போய் விடுகிறது
காலம்,
வலி,
மகிழ்ச்சி,
வாழ்வு,
மரணம் என
அனைத்தும்
நம்மை
பரிதவிக்க விட்டு விட்டு.
உன்
ஆழ்மன சீட்டுகளை
என்னிடம்
கலைத்துப் போடுவது
இதோடு
90 ஆவது முறை
ஒவ்வொரு முறையும்
ஒரே கட்டை
ஓராயிரம் விதமாய்
கலைத்து
அடுக்கி
பிரித்து
போடுகிறாய்
எதை மெய்ப்பிக்க
இந்த ஆட்டம்?