Monday, June 13, 2011

பறவைக்காரி

‘நீங்கள் சிலைகள்’ என்று
கலைமகளின் துணையோடு
கற்பிக்கப்பட்ட
உலோக வனத்தில்
நெய்யப்பட்ட பறவைகளுக்காக
பூச்சிகளின் இரைச்சலையும்
மிருகங்களின் அலறல்களையும் தாண்டி
செவி மடுத்து, வாதிட்ட பறவைக்காரி
எடை பார்க்கும் எந்திரங்களின்
ஞானத்திற்கு புலப்படாத
இலைகளையும், பூக்களையும்
காற்றையும், இசையையும்
கொத்திக் கொண்டு
பறந்தேகினாள் பறவைகளோடு.

09.06.2011