நீரின்றி அமையாது உலகு
பின்னிரவு நேரத்தின்
தொலை தூர
இரயிலோசையென
கடந்து போய் விடுகிறது
காலம்,
வலி,
மகிழ்ச்சி,
வாழ்வு,
மரணம் என
அனைத்தும்
நம்மை
பரிதவிக்க விட்டு விட்டு.