நீரின்றி அமையாது உலகு
எது எதை
எவ்வப்பொழுது
எப்படியெப்படி
உரையாடுவதென்கிற
தியானிப்பில்
நம் உறவில்
விரிந்து கிடக்கிறது
பெருமௌன பாலை ஒன்று!