நீரின்றி அமையாது உலகு
ரகசிய மந்திரங்களை
திறவு கோலாக்கி
நம்
முகவரிகளை
உலகிற்கு அளித்தாயிற்று.
மந்திரங்கள்
மாயமாகிய கணத்தில்
ஏதிலிகளாய்.....
நம்மை
நாமே
தொலைத்த காதையை
நம்மில்
யாரறிவார்?