கயமையின் நிழல்
அவனுடனேயே வாழ்வதை
அவனே அறிய
நேரமற்றிருந்தான்.
அவ்வப்போது அவன் கண்ணசைவிலும்
முகச்சுளிப்பிலும்
ஒவ்வொரு அடியிலும்
கைகுலுக்கல்களிலும் என
எல்லா நேரங்களிலும்
அவனை அது இம்சித்த காலம் மாறி
அவன் அதுவாகவும்
அது அவனாகவும்
மாறிய கணத்தில்
என் கண்களில் பட்டு விட்டது
அது அவனை விழுங்குமா?
அவன் அதைக் கொல்வானா?
என்று பதறும் நொடியில்
என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது
காலம்.